அந்த ஊரின் மிக பெரிய வீடு அது. அது அந்த ஊரின் எல்லையில் இருந்தது. பக்கத்திலேயே கொடிய மிருகங்கள் வசிக்கும் பெரிய காடும் இருந்தது. அந்த வீட்டில் இரண்டு குழந்தைகள். பெரியவள் மிலி, அவளுக்கு ஒன்பது வயது மற்றும் அவள் தம்பி மித்ரன், அவனுக்கு ஏழு வயது. மிலி மிகவும் பிடிவாதமானவள். ஆனால் அவளும் தம்பியும் ஒற்றுமையாக விளையாடுவார்கள்.
ஒரு நாள் அவள் தன் தந்தையிடம் விளையாட்டு பொம்மை ஓன்று வாங்கி கேட்டு அடம் பிடித்தாள். ஆனால் அவள் தந்தை இன்று முடியாது, இன்னொரு நாள் வாங்கி தருகிறேன் என்றார். அதனால் மிலி தந்தையிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு காட்டு பகுதிக்கு நடந்தாள். அவள் நடந்து வந்ததில் காட்டின் நடு பகுதிக்கே வந்து விட்டாள். நேரமும் இருட்டி விட்டது. அவளுக்கு மெல்ல பயம் உண்டாயிற்று. என்ன செய்ய முடியும், அங்கே பக்கத்தில் இருந்த ஒரு குகையில் தங்கி கொண்டாள். இரவு நேரம், அவளுக்கு தூக்கம் வரவில்லை, அங்கே கேட்கும் சத்தத்தையே கவனித்து கொண்டிருந்தாள்.
அப்போது குகை பக்கமாக வந்த ஒரு கரடி சத்தமிட்டு கொண்டே சென்றது. அதை கேட்டதும் மிலி-க்கு வேர்த்துவிட்டது. அவள் மிகவும் பயத்துடன் கடவுளை வேண்டி கொண்டிருந்தாள். இன்று இரவு மட்டும் கழிந்து விட்டால் நாளை எப்படியாவது வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று எண்ணினாள். கடவுளே! என்னை காப்பாற்று ! என்று அவளது மனது சொல்லிக்கொண்டே இருந்தது.
மிலி-யும் காட்டின் தேவதையும் |
அப்போது அங்கே ஒரு பெரிய வெளிச்சம் தோன்றியது. அவள் ஒரு கொடிய மிருகம் தன்னை தாக்க வருவதாகவே நினைத்து பயந்தாள். ஆனால் அங்கே அவளின் அழுகுரல் கேட்டு தோன்றியது, அந்த காட்டின் தேவதை. பக்கத்தில் வந்ததும் உன் பெயர் என்ன, நீ எப்படி இங்கு வந்தாய் என்று கேட்டது அந்த தேவதை. மிலி-க்கு அப்போது தான் கொஞ்சம் தைரியம் வந்தது. அவள் நடந்தவற்றை கூறினாள். அந்த தேவதை அவளுக்கு சாப்பிட தேவையான பழங்களை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது. அந்தப் பழங்களை உண்டதும் அவளது பசி நீங்கியது. ஆனாலும் அவள் அழுது கொண்டே இருந்தாள்.
தேவதை, நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு மிலி, நான் வீட்டை விட்டு வந்திருக்க கூடாது. நான் எனது தந்தை கூறியதை கேட்காமல் வந்துவிட்டேன். எனக்கு என் தம்பியையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்றாள்.
அதற்கு அந்த காட்டின் தேவதை, நீ அழாதே! நான் உன்னை உன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறேன். ஆனால் இன்னொரு முறை இந்த தவறை செய்யாதே என்றது. சரி என்று அவள் சொல்லி முடித்தாள். அதற்குள் அவளது தந்தை மிலி-யை தேடி அங்கு வந்து விட்டார்.
உடனே அந்த தேவதை நான் கூறியவற்றை மறந்து விடாதே! என்றவாறு, என் நினைவாக இதை வைத்து கொள் என்று கூறி அவளை தேவதை போல் அலங்கரித்து விட்டு அவள் கேட்ட பொம்மையையும் கொடுத்து விட்டு சென்றுவிட்டது. மிலி தேவதைக்கு நன்றி கூறினாள்.
மிலி நடந்தவற்றை தந்தையிடம் கூறி மன்னிப்பும் கேட்டாள். மிலியின் தந்தை அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தார். அன்றிலிருந்து மிலி-யின் பிடிவாத குணம் முற்றிலுமாக அழிந்து போயிருந்தது. அவள் மிகவும் ஒழுக்கமான குழந்தையாக மாறியிருந்தாள். அவளது தம்பியுடன் சந்தோசமாக விளையாடினாள்.
மிலி நடந்தவற்றை தந்தையிடம் கூறி மன்னிப்பும் கேட்டாள். மிலியின் தந்தை அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தார். அன்றிலிருந்து மிலி-யின் பிடிவாத குணம் முற்றிலுமாக அழிந்து போயிருந்தது. அவள் மிகவும் ஒழுக்கமான குழந்தையாக மாறியிருந்தாள். அவளது தம்பியுடன் சந்தோசமாக விளையாடினாள்.
Nice story for kids...
ReplyDeleteNew novelist coming good work for kids...
ReplyDeleteNice..
ReplyDelete