Pages

Wednesday 8 August 2018

சரக்கு ரயில் வண்டி பயணம்

சரக்கு ரயில் வண்டி பயணம்
சரக்கு ரயில் வண்டி பயணம்


   ஒரு சரக்கு ரயில் வண்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. அந்த ரயில் வண்டி அடர்ந்த காட்டு பகுதி வழியாக செல்ல வேண்டும். அந்த வண்டியில் ஐந்து பெட்டிகள் இருந்தன. அதில் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்ச்சை, கொய்யா, ஸ்ட்ராபெரி  போன்ற பழங்கள் இருந்தன.


   அந்த வண்டி சென்று கொண்டிருக்கும் போது குறுக்கே ஒரு மரம் விழுந்து கிடந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் ஓட்டுநர் தவித்த போது அங்கே பக்கத்து காட்டிலிருந்து இரண்டு யானைகள் வந்து மரத்தை தூக்கி போட்டன. ஓட்டுநர் அந்த யானைகளுக்கு நன்றி கூறினார்.

   மீண்டும் அந்த வண்டி காட்டுப்  பாதை வழியாக போய்க் கொண்டிருந்த  போது ஒரு புலி குறுக்கே வந்தது. ஓட்டுநர் பயந்து போய்  வண்டியை நிறுத்தி விட்டு ஒளிந்து கொண்டார். புலி வந்து பார்த்த போது எல்லாமே பழங்களாக இருந்தது. புலி மாமிசம் மட்டுமே உண்ணும் என்பதால், சீ சீ அனைத்தும் பழங்களாக இருக்கிறதே என்று கூறிவிட்டு சென்றுவிட்டது. 

  மீண்டும் ஓட்டுநர் ரயில் வண்டியை இயக்கினார். அவர் புலியை கண்டு பயந்ததில் தவறான பாதையில் ரயில் வண்டியை கொண்டு வந்து விட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார் ஓட்டுநர்.

   அப்போது அங்கே  இரண்டு ஒட்டக சிவிங்கிகள் வந்தன. அவைகள் மிகவும் உயரமாக இருந்ததால், அவைகளுக்கு மரங்களுக்கு மேலே எல்லா இடங்களும் தெரிந்தன. அவைகள் அவருக்கு வழிகாட்டின. ஓட்டுனரும் சரியான வழியில் ரயில் நிலையத்திற்கு வந்து பழங்களை இறக்கிவிட்டார். மிக்க மகிழ்ச்சி கொண்டு மிருகங்களுக்கு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment