Pages

Friday 17 August 2018

நெருப்பு கோழியை காப்பாற்றிய நண்பர்கள்

ஒரு அடர்ந்த காட்டில் முள்ளம்பன்றியும், முயலும், நெருப்பு கோழி ஒன்றும் நண்பர்களாக இருந்தன. அவைகள் பக்கத்திலிருந்த அருவியில் சேர்ந்து குளித்து விட்டு, தினமும் அருவி ஓரங்களில் விளையாடும்.

அன்றும் அது போல அங்கிருந்த பூக்களையும், பழங்களையும் பறித்து சாப்பிட்டும் விளையாடிக்கொண்டும் இருந்தன. அப்போது அங்கே ஒரு பெரிய சத்தம் எங்கிருந்தோ கேட்டது. அதை கேட்ட எல்லா மிருகங்களும் பயந்து ஓடின. நண்பர்களான முள்ளம்பன்றியும், முயலும் ஓடின. ஆனால், நெருப்பு கோழி மட்டும் பக்கத்திலிருந்த ஒரு மரத்தின் பொந்திற்குள் தலையை நுழைத்துக் கொண்டு நிற்றது.

நண்பர்களுக்கு எப்படி நெருப்புக்கோழியை காப்பாற்றுவது என்று தெரியவில்லை. ஏனென்றால், பக்கத்திலிருந்த மலையிலிருந்து கற்கள் உருண்டு ஓடி வந்து கொண்டிருந்தன. 

நெருப்பு கோழியை நண்பர்கள் எவ்வளவு சத்தமாக அழைத்தும் அசையவில்லை. அதுக்கு உலகமே இருண்டு விட்டது என்ற நினைப்பு, நெருப்புக்கோழிகளின் குணாதிசயம் அது. 

என்னசெய்வது நெருப்புக்கோழியை  விட்டுச்செல்ல நண்பர்களுக்கு மனமில்லை. கடைசியாக ஒரு சிறிய கல்லை எடுத்து நெருப்புக்கோழியின் மேல் எறிந்தன. நெருப்பு கோழி தலையை திருப்பி பார்த்தபோது கற்கள் உருண்டுவந்து கொண்டிருந்தன. 

அவ்ளோதான் நெருப்புக்கோழியும், நண்பர்களும் ஓடத் துவங்கினர். ஒருவழியாக தப்பித்துக்கொண்டனர். மிகவும் மதிநுட்பமாக செயல்பட்டு தன்னை காப்பாற்றிய நன்பர்களுக்கு நெருப்புக்கோழி நன்றி கூறியது. நண்பர்களுக்குள் எதுக்கு நன்றி என்றன முள்ளம்பன்றியும், முயலும். மீண்டும் நண்பர்கள் மூவரும் காட்டிற்குள் சந்தோசமாக விளையாடி மகிழ்ந்தனர். 

No comments:

Post a Comment