Pages

Saturday 9 May 2020

சிங்கமும் புத்திசாலி கழுதையும்

சிங்கமும் புத்திசாலி கழுதையும்

ரு காட்டில் இருந்த ஏரியின் ஒரு பக்கத்தில் சிங்கமும் மறு பக்கத்தில் கழுதையும் தண்ணீர் குடித்து கொண்டிருந்தன. சிங்கமோ எப்படியாவது கழுதையை மத்திய உணவாக்கிட வேண்டும் என்று எண்ணியது.

மெதுவாக கழுதையிடம், கழுதையாரே! உங்கள் நண்பர்களை கூப்பிடுங்கள் எனக்கு பாட்டு கேட்க வேண்டும் போல் இருக்கிறது என்றது. உடனே, கழுதை அதற்கென்ன நானே பாடுகிறேன் கேளுங்கள் என்றவாறு பாட ஆரம்பித்தது.

இதுதான் சமயம் என்று என்னிய சிங்கம் கழுதை மீது அக்கரைக்கு பாய்ந்தது. புத்திசாலி கழுதையோ அந்த இடத்திலிருந்து சற்று நீங்கி விட்டது. சிங்கம் அடுத்து பாய்வதற்கு தயாரானது. உடனே கழுதையார்! சிங்கமே நான் உங்களது மதிய சாப்பாட்டிற்கு வருகிறேன். ஆனால் வலிமை மிக்க விலங்குகள் எல்லாமே சாப்பாட்டிற்கு முன் கடவுளை வணங்குவது வழக்கம். தாங்கள் எப்படியோ? என்றது.



சிங்கம் அதை கேட்டதும் தற்பெருமையில் "நான் தான் இந்த காட்டிலேயே வலிமையானவன்" என மனதிற்குள் என்னியவாறு கண்களை மூடி கடவுளை வணங்க ஆரம்பித்தது. அதுதான் தாமதம்! கழுதையோ ஒரே ஓட்டமாக ஓடி காட்டிற்குள் மறைந்தது விட்டது. சிங்கம் கண்களை திறந்த போது கழுதை இல்லை. தான் ஏமாந்ததை புரிந்து கொண்டு நடையை கட்டியது.

"அகங்காரம் முட்டாளாக்கிவிடும்"-அல்லவா குட்டிஸ் 

No comments:

Post a Comment